Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கரூர்: தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். இதற்காக செந்தில் பாலாஜி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது, ஜோதிமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேற்குறிப்பிட்ட இந்த 4 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 29-ம் தேதி கடைசி நாளாகும். மக்களவைத் தேர்தலோடு, மே 23 அன்று தமிழகத்தின் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.